புர்கினா பாசோவின் பாதுகாப்பு மற்றும் உளவுச் சேவை நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு சதி ஒன்றை முறியடித்ததாக அந்நாட்டு இராணுவ அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தி குழப்ப சூழலை உருவாக்க அதிகாரிகள் மற்றும் ஏனையோர் முயன்றதாக அது குற்றம்சாட்டியுள்ளது. நாட்டின் இடைக்கால ஜனாதிபதியான இப்ராஹிம் டரோரே ஆட்சியை கைப்பற்றி ஒரு ஆண்டுக்கும் குறைவான காலத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நாட்டில் இஸ்லாமியவாதிகளின் கிளர்ச்சி அதிகரித்த நிலையில் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சி அந்த ஆண்டில் ஏற்பட்ட இரண்டாவது சதிப்புரட்சியாக இருந்தது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை (27) மாலை தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட அறிக்கையில், இந்த செயலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டபோதும் அது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை.