Saturday, April 27, 2024
Home » கைதான 6 பேருக்கும் பிணை
திருமலையில் திலீபன் ஊர்தி மீதான தாக்குதல்

கைதான 6 பேருக்கும் பிணை

by gayan
September 23, 2023 7:42 am 0 comment

திருகோணமலையில் திலீபனின் உருவச்சிலை ஊர்தி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உட்பட 6 சந்தேகநபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

திருகோணமலை உதவி பொலிஸ் மாஅதிபரால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில், இவர்களை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் நேற்று முன்தினம் (21) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த 6 சந்தேக நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

ரொட்டவெவ குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT