332
முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அங்கீகாரத்துடன் அளம்பில் இளந்தென்றல் விளையாட்டு கழகம் நடத்தும் நாகமுத்து கிட்டிணன் – கிட்டிணன் காந்தமலர் ஞாபகார்த்த கிண்ண தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கழக மைதானத்தில் ஆரம்பமானது.
முதல் போட்டியில் இளம் பறவைகள் அணியை எதிர்கொண்ட உடுப்புக்குளம் அலையோசை அணி 4–2 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. இதில் 2 கோல்களை பெற்ற மதுரகன் ஆட்டநாயகனாக தெரிவானார்.
இந்த வெற்றியுடன் அலையோசை அணி லீக் சுற்றுக்கு தெரிவானது.