Wednesday, May 8, 2024
Home » நல்லூர் கந்தசுவாமி ஆலய தங்கரத திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய தங்கரத திருவிழா

by Prashahini
September 11, 2023 2:59 pm 0 comment

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ 21ஆம் திருவிழாவான தங்கரத திருவிழா, நேற்று (10) மாலை இடம்பெற்றது.

வள்ளி , தெய்வானை மற்றும் வேல் பெருமான் தங்கரதத்தில் , எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்கள்.

நல்லூர் மகோற்சவம் கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இன்று (11) காலை, 6.45 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று மாம்பழ திருவிழா இடம்பெற்றது.

நாளை (12) மாலை 6.00 மணிக்கு சப்பர திருவிழாவும், நாளை மறுதினம் (13) காலை 07.00 மணிக்கு தேர் திருவிழாவும் , மறுநாள் வியாழக்கிழமை (14) காலை தீர்த்த திருவிழாவும் நடைபெற்று அன்றைய தினம் மாலை கொடியிறக்கம் இடம்பெற்று மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறும்.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT