Friday, May 10, 2024
Home » யாழில் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம்; சிறிய தந்தை கைது

யாழில் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம்; சிறிய தந்தை கைது

by Prashahini
July 21, 2023 2:23 pm 0 comment

யாழ்ப்பாணம், பலாலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அச்சிறுமியின் சிறிய தந்தை நேற்று (20) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் நேற்று தெல்லிப்பளை பிரதேச செயலக சிறுவர், பெண்கள் பிரிவு உத்தியோகஸ்தர்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்த போது , குறித்த சிறுமி தனக்கு நடக்கும் சம்பவங்கள் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார். இதன் ஊடாக சிறுமியின் வீட்டுக்கு இரவு வேளைகளில் செல்லும் , சிறுமியின் தந்தையின் சகோதரன் , சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு உத்தியோகஸ்தர்கள் அறிவித்ததை அடுத்து , பொலிஸார் சிறுமியின் சிறிய தந்தையை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT