Monday, May 20, 2024
Home » நியூசிலாந்தில் துப்பாக்கி சூடு: இருவர் உயிரிழப்பு

நியூசிலாந்தில் துப்பாக்கி சூடு: இருவர் உயிரிழப்பு

by sachintha
July 21, 2023 2:46 pm 0 comment

பிஃபா மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டி ஆரம்பிப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் நியூசிலாந்தின் ஒக்லாந்து நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ஒன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கட்டுமானத் தளம் ஒன்றில் நேற்று (20) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் உட்பட ஆறு பேர் காயமடைந்திருப்பதோடு துப்பாக்கிதாரியும் உயிரிழந்துள்ளார்.

எனினும் இது பயங்கரவாத செயல் இல்லை என்று பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துள்ளார். உலகக் கிண்ணம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த கட்டுமானத் தளத்தில் இருப்பவர்கள் மீது துப்பாக்கிதாரி சுட ஆரம்பித்த நிலையில் அங்கு விரைந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று ஆரம்பமான மகளிர் உலகக் கிண்ணத்தின் முதல் போட்டி ஒக்லாந்தின் ஈடன் பார்க்கில் நியூசிலாந்து மற்றும் நோர்வே அணிகளுக்கு இடையில் நடைபெற்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT