நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலிணி பிரியமாலிக்கு எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் (13) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.
நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலிணி பிரியமாலியின் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படும் ஜானகி சிறிவர்தன எனும் பெண்ணை பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டது.
பிரபல வர்த்தகரான ஜானகி சிறிவர்தன, கடந்த நவம்பர் 04ஆம் திகதி கொழும்பு, கோட்டை, கிறிஸ் சதுக்கத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment