129
இவ்வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (09) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இன்று (09) முதல் எதிர்வரும் (12) வரை பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன. சபாநாயகரின் தலைமையில் நடைபெற்றுள்ள பாராளுமன்றவிவகாரங்கள் தொடர்பான கூட்டத்தில் இதுபற்றி தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கிணங்க இன்றைய தினம் தேசிய நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பான அலுவலக சட்டமூலம், தேசிய நீர் தொடர்பான சட்டமூலம் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் கீழ், வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் கட்டளைகள் தொடர்பான விவாதங்களும் இடம்பெறவுள்ளன.
லோரன்ஸ் செல்வநாயகம்