எட்டுப் பேரை ஏற்றிச் சென்ற அமெரிக்க இராணுவத்தின் ஆஸ்ப்ரே விமானம் நேற்று தெற்கு ஜப்பான் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இது குறித்து தகவல் அறிந்த ஜப்பானிய கடலோரக் காவல்படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விபத்து நடந்த இடத்திற்குச் சென்றுள்ளது. அங்கு ஒரு பயணியின் உடலை மீட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
எனினும் விமானத்தில் இருந்த மற்றவர்களுக்கு என்ன ஆனது என்பது உறுதி செய்யப்படவில்லை.
ஜப்பானில் அமெரிக்க ஆஸ்ப்ரே இராணுவ வி மானம் இருந்தது சர்சைக்குரியது என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர். அது ஒரு ஹைப்ரிட் வடிவ இராணுவ விமானம் என்பதால், அது ஜப்பான் கடலில் விபத்துக்குள்ளாக அதிக வாய்ப்பு இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.