சிரியாவின் இரு பிரதான விமானநிலையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று (22) ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
டமஸ்கஸ் சர்வதேச விமானநிலையம் மற்றும் அலெப்போ விமானநிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரிய அரபு நியுஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதனால் இரு சிவில் ஊழியர்கள் கொல்லப்பட்டதாக சிரிய அரச அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ரோட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிரியாவின் டமஸ்கஸ் மற்றும் அலெப்போ விமானநிலையங்கள் சிவில் விமான சேவைகளை கையாள்வது மாத்திரமன்றி இராணுவத் தளங்களாகவும் செயற்பட்டு வருகின்றன. லெபனான் மற்றும் சிரியாவில் இயங்கியவரும் சக்தி மிக்க ஆயுத அமைப்பான ஹிஸ்புல்லாவுக்கு ஈரானின் ஆயுதங்கள் இங்கிருந்தே விநியோகிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல்களால் இரு விமானநிலையங்களினதும் ஓடுபாதைகள் சோதமடைந்து செயற்பட முடியாத நிலையில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த இரு விமானநிலையங்கள் மீதும் இஸ்ரேல் கடந்த வாரமும் வான் தாக்குதல் நடத்தி இருந்தது.