702
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு இன்று (23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி தெனியாய, அக்குரஸ்ஸ, முலட்டியான, வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பகுதிகளில் தாழ் நிலப் பிரதேசங்களில் வாழும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.