அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சர்கள் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அதன்படி,
- சுற்றாடல் அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்லவும்,
- விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீரவும்
- சுகாதார அமைச்சராக வைத்தியர் ரமேஷ் பத்திரணவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விவசாய அமைச்சிற்கு மேலதிகமாகவே பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளதோடு கைத்தொழில் அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக வைத்தியர் ரமேஷ் பத்திரண சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்பொழுது நிதி இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, அமைச்சரவை அந்தஸ்தற்ற தோட்டத் தொழில் முயற்சிகள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.