வவுனியா, புதிய கோவில்குளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தங்கம் காணப்படுவதாக சந்தேகிக்கப்படும் பல இடங்களில் நேற்று முன்தினமும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
வவுனியா நீதவான் வசீம் அஹமட் மேற்பார்வையில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தனியார் காணியில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று இடங்களில் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றன. வவுனியா நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு பொலிஸ் குற்றத்தடுப்பு விசாரணை ஆய்வக அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பூவரசங்குளம் பொலிஸார் இணைந்து அகழ்வுப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
வவுனியா விசேட நிருபர்