- இரு கடற்படையினர் உள்ளிட்ட 901 பேர் குணமடைவு
கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 05 கடற்படை உறுப்பினர்கள் மாத்திரம் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 02 கடற்படை உறுப்பினர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து நேற்று வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய, கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக்கை 901ஆக உயர்வடைந்துள்ளது.
கொவிட்-19 தொற்றுக் காரணமாக வைத்தியசாலைகளில் மொத்தமாக 906 கடற்படையினர் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இக்கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, மேலும் 14 நாட்களுக்கு அவர்களை தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
Add new comment