Wednesday, July 15, 2020 - 12:35pm
மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 09 மணித்தியால நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
மாத்தறை, மாலிம்பட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு வேலை காரணமாகவே, குறித்த நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அன்றையதினம் காலை 8.00 மணி முதல், மாலை 5.00 மணி வரை நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
தியகஹ, கெகணதுர, வெஹெரஹேன, கோட்டகொட, திக்வெல்ல, குடாவெல்ல ஆகிய பிரதேசங்களில் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment