கொழும்பின் சில பகுதிகளில் இன்று நீர் வெட்டு

திருத்த வேலை காரணமாக, இன்று  சனிக்கிழமை (27) கொழும்பின் சில பகுதிகளில் 18 மணி நேர நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்றிரவு 10.00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி வரை நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை (கொழும்பு 13), கிராண்ட்பாஸ் (கொழும்பு 14),  மோதறை, மட்டக்குளி, முகத்துவாரம் (கொழும்பு 15) ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கோட்டை (கொழும்பு 01), புறக்கோட்டை (கொழும்பு 11), புதுக்கடை (கொழும்பு 12) ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனவும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...