தம்பதிக்கு இடையில் முறுகல்; கணவன் கொலை

கட்டுகஸ்தோட்டையில் வீடொன்றில் இடம்பெற்ற குடும்பத் தகராறில் மனைவி தனது கணவனை கெலை செய்துள்ள்ளார்.

யட்டிவாவல, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிலேயே நேற்று (20) மாலை இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த வீட்டிலுள்ள கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டு கொண்டு சென்றதால் மனைவியினால், கணவன் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

மனைவி,  கணவர் மீது கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நடத்திய நிலையில், தலையில் பலத்த காயமடைந்த கணவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


Add new comment

Or log in with...