மனைவியை முறையற்று அழைத்தனர்; கொலையில் முடிந்த சண்டை

மஹாஓயா 69ஆம் சந்திப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுத்துள்ளது. 

இச்சம்பவத்தில் மரணித்தவரின் மனைவியை, அப்பிரதேசத்தில் வசிக்கும் இருவர், முறையற்ற  வகையில் அழைத்துள்ளனர். இது தொடர்பில் குறித்த பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து குறித்த பெண்ணின் கணவருக்கும் குறித்த நபர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டுகொண்டு சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

நேற்று (14)  இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


Add new comment

Or log in with...