சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில் 70ஆவது வருட மீலாத் மற்றும் பரிசளிப்பு வைபவம் வெள்ளவத்தை ஏ.எம்.எம். மர்லீன் மண்டபத்தில் நிலையத்தின் தலைவர் உமர் காமில் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக இலங்கைக்கான மலேசியாவின் உயர்ஸ்தானிகர் பட்லி ஹிஷாம் ஆதம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இல்மா சர்வதேச பாடசாலையின் மாணவி ஷாஹிதா தாசிம் சிறந்த பேச்சாளர் விருதை பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக்கொண்டார். மேலும் தலைவர் ஒமர் காமில் நிலையத்தின் வெளியீடுகளை பிரதம அதிதிக்கு வழங்கி வைத்தமை விசேட அம்சமாகும்.
ஹிப்ழ், சொற்பொழிவு, எழுத்துக்கலை போன்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசு வவுச்சர்களை பிரதம அதிதி வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் இணைச் செயலாளர் அஷ்ரோப் ஜமீல், இணைப் பொருளாளர் ஹனீபா இஷாக், மர்ஷாத் பாரி, ரிமாஸ் சலீம், பரீன் கௌஸ், மகளிர் பிரிவின் தலைவர் Fபாயிசா ஜசீல் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ருஸைக் பாரூக்