அநுராதபுரம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு தொடர்பில் நிறுவனங்களின் தலைவர்களுக்குத் தெளிவுபடுத்தும் செயலமர்வு ஒன்று அண்மையில் அநுராதபுரம் மாவட்ட மேலதிக செயலாளர் சந்தியா என்.ஜி. அபேசேகர தலைமையில் நடைபெற்றது.
உலக உணவு பாதுகாப்புத் திட்டம் சம்பந்தமாக, தொடர்ந்து 04 நாட்களாக நடை பெற்ற நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள முக்கிய அரச நிறுவனங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
இவர்கள் அனைவரும் பிராந்திய செயலக மட்டங்களில் தற்போதைய தரவுகளின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளனர்.
உலக உணவுத் திட்டத்தின் கீழ் 05 மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் மூன்றாவது அமர்வாக அநுராதபுரத்தில் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உலக உணவுப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இதன் மூலம் நடவடிக்கை எடுக்க முடிந்துள்ளது.
அநுராதபுரம் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சுகத் தயானந்தா உட்பட திட்டமிடல் திணைக்களத்தினால் இச் செயலமர்வு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திறப்பனை தினகரன் நிருபர்