Saturday, April 27, 2024
Home » போதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி; ஒரு வருடத்திற்கு சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து

போதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி; ஒரு வருடத்திற்கு சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து

by Prashahini
October 24, 2023 4:19 pm 0 comment

போதையில் பயணிகளுடன் வாகனத்தை செலுத்திய இலங்கை போக்குவரத்து சபையின் சாரதியின் சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறையில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸினை ஊர்காவற்துறை பொலிஸார் மறித்து சோதனையிட்ட போது , சாரதி போதையில் இருந்ததை கண்டறிந்தனர்.

பொலிஸார் சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்று (23) சாரதியை பொலிஸார் முற்படுத்தியபோது , சாரதி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார்.

அதனை அடுத்து, அவரது சாரதி அனுமதி பத்திரத்தை ஒருவருட காலத்திற்கு மன்று இரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன் 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT