யாழ். நகரை அண்மித்த நாலுகால் மட சந்தியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
முச்சக்கரவண்டி பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்.மானிப்பாய் காரைநகர் பிரதான வீதியில் நாலுகால்மடம் சந்தியில் அமைந்துள்ள அரைக்கும் ஆலையொன்றிருந்து பிரதான வீதிக்கு முச்சக்கரவண்டி பயணிக்க ஆரம்பித்த போது பின்புறமாக வந்த பட்டா ரக வாகனம் மோதியுள்ளது.இதன்போது முச்சக்கர வண்டியை செலுத்திய ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 20 வயதான அஜிந்தன் எனும் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதேவேளை, பட்டா ரக வாகனம் மின்கம்பத்துடன் மோதி பகுதியளவில் சேதமடைந்ததோடு வாகன சாரதி காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்.மாவட்ட போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.