உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாணயங்களில் ஒன்றாக இலங்கை ரூபா தற்போது மாறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இந்த வருடத்தின் முதல் 04 மாதங்களில் உலகிலுள்ள அனைத்து நாணயங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளதுடன், முதல் 04 மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபா 9.1% உயர்ந்துள்ளது. யூரோவுக்கு நிகராக 12.7% அதிகரித்துள்ளது. ஸ்டெர்லிங் பவுண்ஸுக்கு நிகராக ரூபா மதிப்பு 10.8% மற்றும் சீன யுவானுக்கு நிகராக 11.4% அதிகரித்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜப்பானிய யென்னுடன் ஒப்பிடுகையில் ரூபா 21% மற்றும் இந்திய ரூபாவுடன் ஒப்பிடுகையில் 9.5% அதிகரித்துள்ளதாகவும் அவுஸ்திரேலிய டொலருடன் ஒப்பிடுகையில் 14.2% அதிகரித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.