378
தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்தில் ஆணொருவரின் சடலமொன்று இன்று (15) மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொலிரூட் ஈஸ்ட் தோட்டத்தைச் 61 வயதான சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகம் காளிமுத்து என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (14) மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பாத நிலையில் நேற்று காலை ஹொலிரூட் 18 பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் மரண பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தலவாக்கலை குறூப் நிருபர்