Tuesday, April 30, 2024
Home » போதைப்பொருளுடன் ஒருவர் கைது

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

by Gayan Abeykoon
April 11, 2024 1:43 pm 0 comment

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுமேத்ராகம பிரதேசத்தில் ஹெரோயினுடன் ஒருவரை கைது செய்ததாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட பொலிஸ் அதிரடிப் பிரிவுடன் இணைந்து தலைமையக பொலிசாரும் தேடுதல் மேற்கொண்டபோதே 36 வயதுடைய நபர் ஒருவர்  விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட  ஹெரோயின் நிறை 3 கிராம் 300 மில்லி கிராம் என தலைமையக பொலிசார் தெரிவித்தனர். இந்த  நிறையுடை ஹெரோயின் 84 பைக்கற்றுகளாக பொதி செய்யப்பட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் ஒரு போதை பொருள் வியாபாரி எனவும் அவர் மீது  நீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தம்பலகாமம் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT