கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவிகளுக்கிடையிலான வருடாந்;த வலைப்பந்தாட்ட கிண்ணத்தை க்ரிஃபிண்டோர் அணி கைப்பற்றியது.
இரண்டு முறை சம்பியன் பட்டத்தை வென்ற தீபா சண்முகதேவா தலைமையிலான ஐஸ் ஸ்ரோம் அணியினருக்கும், இம்முறை முதற்தடவையாக களமிறங்கிய அர்ஷிகா சத்தியசீலன் தலைமையிலான க்ரிஃபிண்டோர் அணியினருக்கும் இடையில் இறுதிப் போட்டி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இளம் வீராங்கனைகளைக் கொண்ட க்ரிஃபிண்டோர் அணியினர் முதல் பாதியில் 10 கோல்களை பெற்று முன்னிலை பெற்றதுடன் இரண்டாவது பாதியில் மேலும் 11 கோல்கள் அடங்கலாக 21 கோல்களை போட்டனர். ஐஸ் ஸ்ரோம் அணியினர் மொத்தமாக 5 கோல்களையே பெற்றனர்.
இப்போட்டியில் மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்றிருந்ததோடு மூன்றாவது இடத்திற்கான போட்டியில் டொமினன்ட் டிவாஸ் அணியை வீழ்த்தி அக்கினி சிறகுகள் வெற்றிபெற்றது.