Wednesday, May 8, 2024
Home » ஜப்பானிலும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானிலும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்

- அளவுகோலில் 6.3 ரிக்டராக பதிவு

by Prashahini
April 4, 2024 11:34 am 0 comment

– இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை

தாய்வான் நாட்டின் தலைநகரில் நேற்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியிருந்தது.

இதனை தாய்வான் நாட்டு மத்திய வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்தது.

நிலம் மற்றும் நீர் பரப்பை ஒட்டிய பகுதியில் உணரப்பட்ட இந்நிலநடுக்கம் 35 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு அமைப்பு வெளியிட்ட செய்தியில், நிலநடுக்கம் ரிக்டரில் 7.4ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்தது.

இந்நிலையில், ஜப்பானின் ஹொன்ஷு கிழக்கு கடலோர பகுதியில் 2ஆவது முறையாக இன்று (04) காலை 8.46 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலநடுக்கம் 32 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. எனினும், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

2024 ஆம் ஆண்டு புத்தாண்டு நாளே ஜப்பான் மக்களுக்கு நிலநடுக்க அதிர்ச்சியுடன் தொடங்கியது. அந்த நிலநடுக்கத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் வீடுகளை இழந்தனர். அப்போதே ஜப்பானில் இன்னும் சில நிலநடுக்கங்களுக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது.

தாய்வானில் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT