Thursday, May 9, 2024
Home » குளிக்க அழைத்துச் சென்ற கைதி தப்பியோட்டம்

குளிக்க அழைத்துச் சென்ற கைதி தப்பியோட்டம்

- போதைப்பொருளுடன் கைதான 27 வயது நபர் மாயம்

by Rizwan Segu Mohideen
April 1, 2024 11:19 am 0 comment

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கலகெதர நீதவான் நீதிமன்றில் இருந்து பெறப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபர் ஒருவர் பூஜாபிட்டிய பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பூஜாபிட்டிய, பட்டகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய குறித்த சந்தேகநபர், போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 26ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி முதல் இன்று (01) வரையில் தடுத்து வைத்து விசாரணை நடத்த, பொலிஸார் நீதிமன்றில் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவைப் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று (31) பிற்பகல் குளிப்பதற்கு அழைத்துச் சென்ற போது சந்தேக நபர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேகநபவரைக் கைது செய்ய பூஜாபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT