முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் 500 ரூபாவை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் நான்கு வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து பிரதி பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரைக்கமைய விசாரணை ஆரம்பிக்கப்பட்டு, அதன் பின்னர் மேற்படி பொலிஸ் சார்ஜன்ட்டுக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகளுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நான்கு குற்றச்சாட்டுகளிலும் மேற்படி பொலிஸ் சார்ஜன்ட் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதை அடுத்து, இச்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், 20,000 ரூபா அபராதம் செலுத்துமாறும் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது. இலஞ்சமாக பெற்ற 500 ரூபாவை அம்முச்சக்கரவண்டி சாரதியிடம் திருப்பிக்கொடுக்குமாறும், நீதிமன்றம் உத்தரவிட்டது.