Home » குழுவை ஒழிக்கும்வரை ‘யுக்திய’ தொடரும்
போதைப்பொருள், பாதாள

குழுவை ஒழிக்கும்வரை ‘யுக்திய’ தொடரும்

by sachintha
March 30, 2024 7:35 am 0 comment

நாட்டில் போதைப்பொருள் மோசடி மற்றும் பாதாள குழு செயற்பாடுகள் முற்றாக ஒழிக்கப்படும்வரை ‘யுக்திய’ சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடருமென, பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

காலிக்கு நேற்று கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட அவர், ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே, இவ்வாறு கூறினார். இது தொடர்பாக பொலிஸ் மாஅதிபர் மேலும் தெரிவித்த போது, “இந்த நாட்டில் போதைப்பொருள் மோசடி மற்றும் பாதாள குழு செயற்பாடு முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டதாக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்வரை ‘யுக்திய’ சுற்றிவளைப்பு தொடரும்.

பாதாள குழுச் செயற்பாடுகள், போதைப்பொருள் விற்பனை தொடர்பாக மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். ‘யுக்திய’ சுற்றிவளைப்பால் எதிர்வரும் ஒரு மாத காலத்துக்குள் நல்ல மாற்றத்தை ஏற்படுமென்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT