பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் பெற்று ஆட்ட நாயகன் விருதையும் வென்ற இலங்கை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா துடுப்பாட்ட வீரர்களுக்கான ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் அதிரடி முன்னேற்றம் கண்டுள்ளார்.
சில்ஹட்டில் நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 102 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 108 ஓட்டங்களையும் பெற்ற தனஞ்சய தரவரிசையில் 15 இடங்கள் முன்னேறி 14 ஆவது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாக பதிவானது.
இதன்போது மொத்தம் 695 தர நிலை புள்ளிகளை பெற்றிருக்கும் தனஞ்சய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான முதல் பத்து இடங்களை எட்டுவதற்கு 40 புள்ளிகளை மாத்திரே குறைவாக பெற்றுள்ளார்.
முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் பெற்ற மற்றொரு வீரரான கமிந்து மெண்டிஸ் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 64 ஆவது இடத்துடன் தர நிலையை ஆரம்பித்துள்ளது.
சில்ஹட் டெஸ்ட் கமிந்து மெண்டிஸ் ஆடிய இரண்டாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜத்த டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி 38 ஆவது இடத்தையும் லஹிரு குமார 6 இடங்கள் முன்னேறி 48 ஆவது இடத்தையும் பெற்றனர்.