Monday, April 29, 2024
Home » வெளிநாடுகளில் வாழும் இந்தியர் வாக்களிக்க வாய்ப்பு வேண்டும்?

வெளிநாடுகளில் வாழும் இந்தியர் வாக்களிக்க வாய்ப்பு வேண்டும்?

by sachintha
March 19, 2024 8:27 am 0 comment

இந்தியாவின் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று இலங்கை இந்திய தொடர்பாளர் மணவை அசோகன் ​வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள கோரிக்கையில், இந்தியாவின் பொதுத்தேர்தலுக்கு திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையிட்டு வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

என்றாலும் இந்திய குடியுரிமை பெற்றுள்ள பலர் இலங்கை உட்பட உலகின் பல நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். என்றாலும் அவர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ள இன்னும் வாய்ப்பளிக்கப்படாதவர்களாக உள்ளனர். ஆனால் இந்திய குடியுரிமை பெற்றுள்ள ஒவ்வொரு பிரஜையும் தம் தாயகத்தின் தேர்தலில் வாக்களிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

அதனால் வெளிநாடுகளில் வாழும் இந்திய குடியுரிமை பெற்றுள்ளவர்கள் இத்தேர்தலில் வாக்களிப்பதற்கு வசதி அளிக்க வேண்டும். குறிப்பாக அவர்கள் வாழும் நாடுகளிலாவது அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இது தொடர்பில் இந்திய தேர்தல் ஆணையாளரும் மத்திய அரசாங்கமும் விஷேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT