முதல் மூன்று மாதங்களில் உரிய இலக்கின் தூரத்தை கடக்க முடிந்தது
போதைப்பொருட்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிப்பதே யுக்திய இராணுவ நடவடிக்கையின் நோக்கமென பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் (17) நடைபெற்ற பொலிஸ் பிரஜைகள் குழுவினருடனான சந்திப்பிலே, அவர் இதனை தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
யுத்தத்தில் வெற்றி பெற்ற நாட்டை போதையிலிருந்து மீட்பதற்கான யுத்தமே யுக்திய செயற்றிட்டமென பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் குறிப்பிட்டார்.
யுக்திய நடவடிக்கையின் முதல் மூன்று மாதங்களுக்குள் உரிய இலக்கின் குறிப்பிட்ட தூரத்தை அடைய முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் சில மாதங்களுக்குள் இந்த நிலைமையை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்து, மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய சூழலை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
இதனிடையே, யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட தினம் முதல் பல்வேறு கடுமையான தீர்மானங்களை மேற்கொண்டு வந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதன்போது தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 107 என்ற பொலிஸ் அவரச தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
24 மணி நேரமும் செயற்பாட்டிலிருக்கும் 107 என்ற துரித இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி, முறைப்பாடுகளை செய்ய முடியும்.
இந்தச் சேவை முற்றிலும் தமிழ் மொழியில் செயற்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.