சுகாதாரத் துறையினர் இன்று காலை 6.30 மணிக்கு ஆரம்பிக்கவிருந்த சுகாதார ஊழியர் பணிப்புறக்கணிப்பை மேலும் 7 நாட்களுக்கு இடைநிறுத்த சுகாதார சேவை ஊழியர் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் 18.3.2023 அன்று சுகாதார அமைச்சர் விடுத்த எழுத்துமூலக் கோரிக்கைக்கு அமைவாக இன்று கூடிய சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் குழுவினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சும் சுகாதார ஊழியர் சங்க கூட்டமைப்பும்; இணைந்து தயாரித்த தொழில்நுட்ப அறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நிதி அமைச்சின் பதில் தாமதமடைந்ததினால் இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலுக்கு ஒருவார கால அவகாசம் வழங்குமாறு சுகாதார அமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதாக சுகாதார சேவை ஊழியர் சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் திரு.ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்தார்.