Thursday, May 9, 2024
Home » தேசியக் கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்

தேசியக் கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்

- விண்ணப்ப காலம் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதியுடன் நிறைவு

by Prashahini
March 15, 2024 7:45 pm 0 comment

2021/2022 கல்வியாண்டில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்களை அழைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் இலக்கம் 2376 இன்று (15) வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் இணையவழி முறையின் ஊடாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியானவர்கள் தேர்வும் இம்முறை இணையவழி ஊடாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (15) மதியம் 12.00 மணிக்குப் பிறகு இணையவழி ஊடாக விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்ப காலம் 05.04.2024 அன்றுடன் நிறைவடைவதாகவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இன்று மதியம் 12.00 மணிக்கு முன் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது, எனவே அந்த விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

Gazette-Sinhala-2

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT