Sunday, April 28, 2024
Home » சென்னையிலிருந்து யாழ். திரும்பியவர் கைது

சென்னையிலிருந்து யாழ். திரும்பியவர் கைது

by Gayan Abeykoon
February 23, 2024 7:37 am 0 comment

யாழ்ப்பாணத்தில் பல்வேறு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரொருவர் தமிழகத்தில் தலைமறைவாகியிருந்து, மீண்டும் நாடு  திரும்பிய  போது நேற்று முன்தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் திரும்புவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விமான நிலைய வளாகத்தில் காத்திருந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் இவர் தொடர்புடையவர் எனவும், நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த நிலையில், சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் திரும்புகையில் கைது செய்யப்பட்டார்.

(யாழ். விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT