ஹற்றன் கல்வி வலயத்தில் வனராஜா கீழ் பிரிவு தமிழ் வித்தியாலயத்துக்கு 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 01 மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு அதிபர் ரெங்கசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வு தரம் 02 மாணவர்களின் வரவேற்று நடனத்துடன் ஆரம்பமாகியது.
அதிபரின் தலைமையுரையில் கல்வியின் அவசியத்தையும் பாடசாலையின் 102 ஆண்டு வரலாற்றுப்பயணத்தில் பதித்த சாதனைகளையும் எடுத்துரைத்ததுடன் மாணவர்களுக்கு பாடசாலை (TIE) பட்டியினையும் அணிவித்து வரவேற்றார்.
நிகழ்வின் இறுதியாக நோர்டன் வாசகர் வட்டத்தின் வெளியீடான மலையக ஆளுமைகளின் ஒருவரான இலங்கை கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் தமிழ் பிரிவு பிரதி ஆணையாளர் அமரர் லெனின் மதிவானம் நினைவுத்தொகுப்பு பிரதியை பாடசாலை வாசிகசாலைக்கு வழங்கிவைத்தார்.
இறுதியாக பழ மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
(நோட்டன் பிரிட்ஜ் நிருபர்)