Sunday, April 28, 2024
Home » இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் இன்று முதல் ஆரம்பம்
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு

இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் இன்று முதல் ஆரம்பம்

by Gayan Abeykoon
February 15, 2024 11:08 am 0 comment

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்கள் கோரல் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு, நேற்று நிதி அமைச்சில் நடைபெற்றதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நேற்று தெரிவித்தார். இந்நிகழ்வில் மாகாண ஆளுநர்கள் மற்றும் மாகாண பிரதம செயலாளர்களுக்கும் இந்த தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

ஏற்கனவே அஸ்வெசும கொடுப்பனவு முதலாவது கட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து இரண்டாம் கட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன் நிறைவில் 24 இலட்சம் பேருக்கு அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT