Sunday, May 12, 2024
Home » மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் அமைச்சர் அலி சப்ரி பங்கேற்பு

மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் அமைச்சர் அலி சப்ரி பங்கேற்பு

by Gayan Abeykoon
February 15, 2024 11:15 am 0 comment

ஜெர்மனியில் நடைபெறவுள்ள மியூனிச் பாதுகாப்பு மாநாட்டுக்கு வெளிநாட்டமைச்சர் அலி சப்ரி அழைக்கப்பட்டுள்ளார். 1963 இல் நிறுவப்பட்ட Munich Security Conference 2024, சர்வதேச பாதுகாப்புக் கொள்கைகளை விவாதிப்பதற்கான உலகின் முதன்மையான தளங்களில் ஒன்றாக  உள்ளது.  சர்வதேச பாதுகாப்பு சமூகத்துக்குள் தொடர்ச்சியான, நிர்வகிக்கப்பட்ட மற்றும் முறைசாரா உரையாடல்களை வளர்ப்பதன் மூலம் நம்பிக்கையை வளர்ப்பது,  மோதல்களில்  அமைதியான தீர்வுக்கு பங்களிப்பது இதன் நோக்கமாகும்.  

வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி எதிர்வரும் 17 ஆம் திகதி “உலகளாவிய பொதுமைகளைப் பாதுகாத்தல்” என்ற தலைப்பில் மாநாட்டு அமர்வில் உரையாற்றுவார்.

இந்த விஜயத்தின் போது அமைச்சர் அலிசப்ரி பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக தலைவர்களுடனும் சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT