செலிங்கோ லைஃப்பின் 2022 ஆண்டு அறிக்கை இலங்கையிலும் தெற்காசிய பிராந்தியத்திலும் நிதி அறிக்கையிடலில் சிறந்து விளங்குவதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஆயுள் காப்புறுதி சந்தைத் தலைவரான செலிங்கோ லைஃப்பின் ஒருங்கிணைந்த அறிக்கையானது புது டில்லியில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட தெற்காசிய கணக்காளர் சம்மேளனத்தின் விருதுகளில் ஆயுள் காப்புறுதித் துறையில் ‘சிறந்த முன்வைக்கப்பட்ட ஆண்டு அறிக்கை’க்கான கூட்டு தங்க விருதை வென்றது.
வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், ஆளுகை மற்றும் நிலைத்தன்மை ஆகிய நான்கு கொள்கைகளில் தொகுக்கப்பட்ட CA Sri Lanka ‘TAGS’ விருதுகளில் ஆயுள் காப்புறுதி பிரிவில் வெள்ளி விருதைப் பெற்ற அதே வருடாந்த அறிக்கைக்கு சில நாட்களுக்குப் பிறகு இவ்வாறு குறிப்பிடத்தக்க பாராட்டு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்கள் (CMA) விருதுகளில் 2022 ஆம் ஆண்டிற்கான செலிங்கோ லைஃப்பின் வருடாந்த அறிக்கையும் ‘10 சிறந்த ஒருங்கிணைந்த அறிக்கைகள்’ மத்தியில் அங்கீகரிக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இலங்கையின் சிறந்த வர்த்தக நாமமாக தெரிவுசெய்யப்பட்ட செலிங்கோ லைஃப், ஒன்பது வருடங்களாக World Finance ஆல் ‘இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக’ தெரிவுசெய்யப்பட்டது, மேலும் ‘மக்கள் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர்’ என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளது.