122
மேலதிக தகவல்கள் https://www.health.gov.lk/
தாதியர் பயிற்சிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை நாளை 10ஆம் திகதி கண்டி தாதியர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. மாத்தளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் தொடர்பான நேர்முகத் தேர்வுகளை நாளை 10ஆம் திகதி சனிக்கிழமை கண்டி தாதியர் கல்லூரியில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) சாமிக்க எச்.கமகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவல்களை சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை (https://www.health.gov.lk/) பார்வையிடுவதன் மூலமும் பெறலாமென்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.