லங்கா ஈ டொக் மற்றும் அப்பலோ ஹொஸ்பிட்டல் குருப் இந்தியா டெலி ஹெல்த் சேர்விஸ் மற்றும் கிளினிக்கல் இணைந்து ஈ தொழில்நுட்பம் வழியாக டெலி சுகாதார முறை ஒன்றை ஆரம்பித்தது. இவ் நிகழ்வு ஹில்டன் ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் அப்பலோ ஹொஸ்பிட்டல் மற்றும் லங்கா ஓ டொக் டொக்டர் நிலுக்கா வெலிக்கல, பணிப்பாளர்கள், இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தானர். இங்கு பிரதான உரையை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ நிகழ்த்தினார். நோயாளிகள் நிர்க்கதியான நிலையில் இந் திட்டம் அவர்களுக்கு இலகுவானதொரு நிவாரனம் வழங்கும் திட்டமாக ஈ.டொக் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இலங்கையில் உள்ள மக்களுக்கு நேர்த்தியானதொரு சுகாதர முறைமையை வழங்கும் இந்த முறைமைய அறிமுகப்படுத்தப்படுகின்றது. இது தொடர்பான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.
(அஷ்ரப் ஏ சமத்)இலத்திரனியல் தொழில்நுட்பம் ஊடான டெலி சுகாதார முறை அறிமுகம்
189