சர்வதேச கிரிக்கெட் கெளன்சிலின் (ஐ.சி.சி.) வருடாந்த பொதுக் குழுக் கூட்டம் எதிர்வரும் ஜூலை 19 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவிருப்பதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டம் இலங்கையில் நடைபெறுவது இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு மற்றும் சுற்றுலாத் துறைக்கு சாதகமானதாக அமையும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் இலங்கை கிரிக்கெட் மீது தடை விதித்திருந்த காலத்தில் இந்தக் கூட்டத்தை இலங்கையில் நடத்தும் வாய்ப்பு பறிபோகும் நெருக்கடி இருந்து வந்தது. எனினும் இலங்கை கிரிக்கெட் மீதான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் ஐ.சி.சி. தடையினால் இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டது.