ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வவுனியா மாவட்டத்திற்கான அமைப்பாளர் மற்றும் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் அமைப்பாளர்களுக்கான நியமனப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.இதன்படி, இராசையா விக்டர் ராஜ் – வவுனியா மாவட்ட பிரதான அமைப்பாளர், வவுனியா தெற்கு (தமிழ்) பிரதேச சபை அமைப்பாளராகவும், G.P நீல் சாந்த – வவுனியா மாவட்ட இணை அமைப்பாளர், வவுனியா தெற்கு (சிங்கள) பிரதேச சபை அமைப்பாளராகவும்,
ஸ்ரீராம் ரஜிதன் – வவுனியா வடக்கு பிரதேச சபை அமைப்பாளராகவும் சிதம்பரசேகரம் அச்சுதன் – வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்படி நியமனங்கள் கட்சியின் பிரதி தலைவரும் யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதனின் பரிந்துரைக்கமைய வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் சாரதி துஸ்மந்த, கட்சியின் பிரதித்தலைவர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(சாவகச்சேரி விசேட நிருபர்)