முன்னணி முதலீட்டு தீர்வுகள் வழங்குநரான First Capital Holdings PLC, இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் வசதியை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. First Capital Money Plus Fund இன் அறிமுகத்துடன், EMV செயற்படுத்தப்பட்ட அட்டையினூடாக இலங்கையில் முதன் முறையாக நம்பிக்கை அலகு முதலீட்டு கணக்குகளிலிருந்து சௌகரியமாக பணத்தை மீளப் பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
புதிய நிதியத்தின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், காப்பாளர் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக HNB உடன் First Capital கைகோர்த்துள்ளது. புதிய புத்தாக்கமான நிதியத்தினூடாக நம்பிக்கை அலகு கணக்குதாரர்களுக்கு, தமது முதலீடுகளை EMV செயற்படுத்தப்பட்ட அட்டையினூடாக சௌகரியமாக அணுகும் வசதி வழங்கப்படும்.
First Capital Holdings PLC இன் சொத்துகள் முகாமைத்துவ பிரிவின் நிறைவேற்று உப தலைவர் கவின் கருணாமூர்த்தி இப் புதிய தீர்வு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “First Capital என்பது இலங்கையின் மூலதன சந்தையில், எப்போதும் பல புரட்சிகரமான அம்சங்களை அறிமுகம் செய்வதில் “முதன்மையாக” (First) திகழ்கின்றது. எமது வர்த்தக நாம உறுதி மொழியான “செயற்திறனுக்கு முதலிடம்” (’Performance First) என்பதற்கமைய, இந்த புரட்சிகரமான தீர்வை நாம் அறிமுகம் முதலீட்டு சந்தையில் செய்வதுடன், பாரம்பரிய முதலீட்டு அம்சங்களுடன் ஒப்பிடுகையில் கவர்ச்சிகரமான வருமானத்தை வழங்கும் நிதியமாகவும் திகழ்கின்றது. உங்களது முதலீட்டை சௌகரியமாகவும் மற்றும் உடனடியாக அணுகும் வசதியையும் வழங்கியுள்ளோம். இந்த வசதியை சந்தையில் முதன் முதலில் அறிமுகம் செய்ய நாம் எதிர்பார்ப்பதுடன், “நிதித்தீர்வுகளினூடாக அனைத்து இலங்கையர்களினதும் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு” (to improve the lives of all Sri Lankans through financial solutions) எனும் எமது நோக்கத்துக்கமைய முக்கியமான மைல்கல்லாக இது அமைந்திருக்கும் என்பதிலும் நம்பிக்கை கொண்டுள்ளேன்.” என்றார்.