கலால் வரியை செலுத்தத் தவறிய இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக, வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
கலால் வரியை தொடர்ச்சியாக முறையாக செலுத்தத் தவறியுள்ள 09 மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை விரைவாக செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மதுபான உற்பத்தி நிறுவனங்களின் மூலம், கலால் திணைக்களத்துக்கு 720 கோடி ரூபா கிடைக்க வேண்டியுள்ளது. இதனை விரைவாக அறவிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஜூன் 15க்கு முன்னர், வரி செலுத்தாத 10 நிறுவனங்களில் ‘ஃபின்லன்ட் டிஸ்டலரீஸ்’ நிறுவனம் கடந்த டிசம்பர் மாதமளவில் நிலுவையாகக் காணப்பட்ட வரியை முழுமையாக செலுத்தியுள்ளது.
இந்நிலையியே, வரி செலுத்தாக இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்