Saturday, April 27, 2024
Home » சப்ரகமுவ பல்கலை மாணவர்கள் 6 பேரும் பிணையில் விடுதலை

சப்ரகமுவ பல்கலை மாணவர்கள் 6 பேரும் பிணையில் விடுதலை

- தலா ரூ. 1 இலட்சம் சரீரப் பிணையில் விடுவிப்பு

by Rizwan Segu Mohideen
January 29, 2024 3:08 pm 0 comment

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவரை பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அப்பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் 6 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (29) பிற்பகல் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதவான் அவர்களை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

சந்தேகநபர்களான சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழிக் கல்வி பீடத்தைச் சேர்ந்த, 23, 24, 25 வயதுகளுடைய 6 மாணவர்களையும் தலா ரூ. 1 இலட்சம் கொண்ட சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

மாணவி ஒருவர் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, கடந்த ஜனவரி 14 ஆம் திகதி ‘1997’ எனம் தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சமனலவெவ பொலிஸாரினால் முன்னெடுத்த விசாரணைகளுக்கமை சந்தேகநபர்கள் நேற்றையதினம் (28) கைது செய்யப்பட்டிருந்தனர்.

நேற்றையதினம் (28) குறித்த மானஅவர்கள் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையானதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பல்கலை மாணவி பகிடிவதை; 6 சப்ரகமுவ மாணவர்கள் கைது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT