Home » துறைசார் மேற்பார்வை குழு அறிக்கை வந்த பின்னரே விவாதம் நடத்த வேண்டும்
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்

துறைசார் மேற்பார்வை குழு அறிக்கை வந்த பின்னரே விவாதம் நடத்த வேண்டும்

by Gayan Abeykoon
January 24, 2024 6:48 am 0 comment

பாராளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய ஒழுங்குவிதிகளை மீறி,  தமக்குள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
எம்.பி எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இந்த விவாதம் சட்டத்திற்கு முரணானது. துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கை வந்த பின்னரே குறித்த விடயம் தொடர்பில் விவாதம் நடத்த வேண்டும்.

இதன்படி  இந்த அறிக்கை வரும் வரை விவாதம் ஒத்தி வைக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாது விவாதத்தை நடத்தி நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து நடவடிக்கைகளும் நிலையியற் கட்டளைகளுக்கு முரணான வகையிலேயே இடம்பெறுகின்றன. அரசாங்கம் தம் வசமுள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி ஒழுங்குவிதிகளை மீறி செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT