Sunday, April 28, 2024
Home » மயூரபதி ஆலயத்தில் சிறப்பு பூஜை

மயூரபதி ஆலயத்தில் சிறப்பு பூஜை

by gayan
January 23, 2024 6:38 am 0 comment

இந்தியாவின் அயோத்தி ராமர் கோயி்லில் நேற்று திங்கட்கிழமை (22) இடம்பெற்ற கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு, மயூரபதி ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, அன்னதானம் வழங்கப்பட்டது. ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பெ. சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலய கலாசாரப் பணிப்பாளர் அங்குரான் தத்தா உள்ளடங்கலான பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையில், இடம்பெற்ற கும்பாபிஷேகப் பெருவிழாவை பக்தர்கள் காணொளி மூலம் காண்பதற்கான ஒழுங்குகளை ஆலய அறங்காவலர் சபை ஏற்பாடு செய்திருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT