Thursday, May 9, 2024
Home » இந்தியா – ரஷ்யா உறவில் புதிய திருப்பம்: சவால்களுக்கு மத்தியில் ஒத்துழைப்புடன் செயற்பாடு

இந்தியா – ரஷ்யா உறவில் புதிய திருப்பம்: சவால்களுக்கு மத்தியில் ஒத்துழைப்புடன் செயற்பாடு

- இரு நாடுகளுக்கிடையிலான புதிய நகர்வு ஆரம்பம்

by Rizwan Segu Mohideen
January 22, 2024 6:26 pm 0 comment

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் கடந்த 2023 டிசம்பர் 25ஆம் திகதி ரஷ்யவிற்கு ஐந்து நாள் ப விஜயம் மேற்கொண்டார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனித்தனியான சந்திப்புகளை நடத்தினார். வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவு போன்ற முக்கிய துறைகளில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இருதரப்பு உறவையும் வலுப்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கு இடையே அடிக்கடி உயர்மட்ட பரிமாற்றங்களை முன்னெடப்பதற்கான கட்டமைப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் முதல் எரிசக்தி மற்றும் பாதுகாப்பு வரை பல்வேறு தளங்களில் நடந்து வரும் ஒத்துழைப்புகளை மதிப்பாய்வு செய்வதற்கான முக்கிய தளத்தை இந்த விஜயம் வழங்கியதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் “சலுகை மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மை” குறித்து க ஜனாதிபதி புடின், பிரதமர் மந்துரோவ் மற்றும் வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் உள்ளிட்ட முக்கிய நபர்களுடன் அமைச்சர் ஜெயசங்கர் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார். பொருளாதார மற்றும் மூலோபாய அம்சங்களை மட்டுமன்றி, கலாச்சார மற்றும் மக்கள் தொடர்புகளையும் உள்ளடக்கியதாக இந்த பரிமாற்றம் அமையும்.

மூலோபாய கூட்டாண்மையின் பிரதான அம்சமாக வருடாந்தம் நடைபெறும் இந்தியா-ரஷ்யா தலைவர்களின் மாநாடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடைபெறவில்லை. இந்த உயர்மட்ட கலந்துரையாடல், இந்தியப் பிரதமர் மற்றும் ரஷ்ய ஜனாதிபதியை ஒன்றிணைத்து, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை உறுதிப்படுத்துகிறது.
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே 21 வருடாங்களான இந்த மாநாடு நடைபெற்று வந்ததோடு இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த உறவுகளுக்கு ஒரு சான்றாக அமைகிறது. உக்ரைனில் நடந்து வரும் மோதலால் மேற்கத்திய உலகில் ரஷ்யா தற்போதைய தனிமைப்படுத்தப்பட்ட போதிலும், இந்தியாவும் ரஷ்யாவும் தொடர்ந்து வலுவான உறவை வளர்த்து வருகின்றன.

இரண்டு சக்திவாய்ந்த ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் ஆழமான வரலாற்று, மூலோபாய மற்றும் பொருளாதார பிணைப்புகளை உலகிற்கு நினைவூட்டுகிறது.

உக்ரைன் நெருக்கடிக்கு இராஜதந்திர தீர்மானம் மற்றும் போர்நிறுத்தத்திற்கு இந்தியா பகிரங்கமாக குரல் கொடுக்கும் அதே வேளையில், ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டிக்க அமெரிக்காவிடமிருந்து இந்தியா அழுத்தத்தை எதிர்கொண்டது. ரஷ்யாவிலிருந்து இந்தியா தொடர்ந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்வது என்பது ஒரு முக்கிய விடயமாகும்.

உக்ரைனில் நடந்து வரும் மோதல்கள் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் இடையேயான வருடாந்த உச்சிமாநாட்டின் இடைநிறுத்தம் என்பவற்றுக்கு மத்தியில், வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கரின் வருகை ரஷ்ய தலைமையுடன் உயர்மட்ட அரசியல் ஈடுபாட்டின் வீரியத்தைப் பேணுவதன் மூலம் இடைவெளியைக் குறைக்கும் நோக்கம் கொண்டது.ரஷ்யாவுடன் உரையாடல் மற்றும் ஈடுபாட்டிற்கான இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்த விஜயம் குறிக்கிறது.

ரஷ்யாவுடனும் அதற்கு முன்னர் சோவியத் யூனியனுடனும் இந்தியாவின் உறவு அதன் வரலாற்றில் மிகவும் நீடித்த புவிசார் அரசியல் கூட்டாண்மையாகும். இந்த ஆழமான வேரூன்றிய கூட்டணி இராஜதந்திர உறவுகளுக்கு அப்பால் நீண்டுள்ளது. அர்ப்பணிப்புள்ள வழிமுறைகளின் வலைப்பின்னல் மூலம் பொருளாதார ஒத்துழைப்பு தீவிரமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT